தமிழ்நாடு

பெருந்துறை அதிமுக வேட்பாளர் ஜெயக்குமாருக்கு கரோனா

DIN

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு செவ்வாயன்று நடந்து முடிந்துள்ள நிலையில், பெருந்துறை சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயக்குமாருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

பெருந்துறை சட்டப்பேரவை தொகுதி அதிமுக வேட்பாளர்  எஸ் ஜெயக்குமாருக்கு  புதன்கிழமை சற்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இதனை அடுத்து பெருந்துறை அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் சோதனை செய்தபோது அவருக்கு கரோனா பாதிப்பு உள்ளதாகவும் பத்து நாள்கள் தனிமையில் சிகிச்சை எடுத்துக்கொள்ளவும் அறிவுறுத்தி உள்ளார்கள்.

ஏற்கனவே தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த திமுக எம்.பி. கனிமொழி, காட்பாடி திமுக வேட்பாளர் துரைமுருகன் உள்ளிட்டோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று பெருந்துறை அதிமுக வேட்பாளருக்கும் கரோனா உறுதியாகியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தைவானில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

மெட்ரோ ரயிலில் ஏப்ரல் மாதத்தில் 80.87 லட்சம் பேர் பயணம்!

வட கொரிய அதிபரின் ‘அந்தப்புரம்’? ஆண்டுக்கு 25 அழகிய பெண்கள்!

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா அதிரடி!

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT