தேனாம்பேட்டை, அண்ணா நகரில் பாதிப்பு 2,000-ஐத் தாண்டியது: சென்னையில் கரோனா நிலவரம்
சென்னையில் தேனாம்பேட்டை, அண்ணா நகர் ஆகிய இரு மண்டலங்களில் கரோனா பாதிப்பு 2 ஆயிரத்தைத் தாண்டியது.
சென்னையில் தேனாம்பேட்டை, அண்ணா நகர் ஆகிய இரு மண்டலங்களில் கரோனா பாதிப்பு 2 ஆயிரத்தைத் தாண்டியது.
தமிழகத்தில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் சென்னையில் கரோனா பாதிப்பு நிலவரத்தை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
அதன்படி, சென்னையில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 18,673 ஆக அதிகரித்துள்ளது.
Advertisement
இதுவரை கரோனாவுக்கு 4,337 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், மொத்தமாக 2,69,614 பேர் பாதிக்கப்பட்டதில் 2,46,604 பேர் குணமடைந்துள்ளனர்.
மண்டலவாரியாக கரோனா பாதிப்பு விவரமும் வெளியிடப்பட்டுள்ளது. இதில் தேனாம்பேட்டை, அண்ணா நகர் ஆகிய இரு மண்டலங்களில் கரோனா பாதிப்பு 2 ஆயிரத்தைத் தாண்டியது.
தேனாம்பேட்டையில் அதிகபட்சமாக 2,109 பேரும், அதையடுத்து அண்ணா நகரில் 2,037 பேரும், கோடம்பாக்கத்தில் 1,708 பேரும், ராயபுரத்தில் 1,698 பேரும் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மண்டலவாரியாக கரோனா பாதிப்பு விவரம்