முகப்பு
தமிழ்நாடு

கண்ணகி கோயிலில் கொடியேற்றம் இல்லை; பக்தர்கள் ஏமாற்றம்

தமிழக, கேரள எல்லைப் பகுதியில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோயிலில் புதன்கிழமை நடைபெற இருந்த முழுநிலவு விழாவிற்கான கொடியேற்றம் ரத்து செய்யப்பட்டதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:00 PM
கண்ணகி கோயில் நுழைவு வாயில் (கோப்பு படம்)
பகிர்:

கம்பம்: தமிழக, கேரள எல்லைப் பகுதியில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோயிலில் புதன்கிழமை நடைபெற இருந்த முழுநிலவு விழாவிற்கான கொடியேற்றம் ரத்து செய்யப்பட்டதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

தமிழக கேரளா எல்லையில் உள்ளது மங்கலதேவி கண்ணகி கோயில். ஆண்டுதோறும் சித்திரை மாதம் பௌர்ணமி நாளன்று முழுநிலவு விழா கொண்டாடப்படும்.

கடந்த ஆண்டு கரோனா தொற்று பரவல் காரணமாக முழுநிலவு விழா ரத்து செய்யப்பட்டது.

இந்தாண்டு குறைந்தபட்ச பக்தர்களுடன் சமூக இடைவெளியுடன் விழா நடத்துமாறு மங்கலதேவி கண்ணகி கோயில் அறக்கட்டளையினர் தேனி மாவட்ட நிர்வாகத்துக்கு மனு கொடுத்தனர்.

அதன்படி புதன்கிழமை சித்திரை முதல் நாள் லோயர்கேம்பில் உள்ள பலர் குடியில் கொடியேற்றம் நடைபெற வேண்டும். 

மாவட்ட நிர்வாகம் எந்தவித பதிலும் தராத நிலையில் லோயர் கேம்ப் பகுதியில் கண்ணகி கோயில் கொடியேற்ற விழாவிற்கு சென்ற பக்தர்கள் அங்கு யாரும் இல்லாததால் ஏமாற்றம் அடைந்தனர்.

இதுகுறித்து கண்ணகி கோயில் அறக்கட்டளை நிர்வாகிகள் த.ராஜகணேசன், பி.எஸ்.எம். முருகன் ஆகியோர் கூறும்போது இரண்டாவது ஆண்டாக திருவிழா நடைபெறவில்லை, சமூக இடைவெளியுடன் தமிழக எல்லைப் பகுதி வழியாக கண்ணகி கோவிலில் வழிபாடு நடத்த மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.

ஆனால் மாவட்ட நிர்வாகம் அதை கண்டுகொள்ளவில்லை, தற்போது வருடத்திற்கு ஒருமுறையாவது கோயில் வளாகத்தில் உள்ள முட்புதர் செடிகொடிகள் அகறறப்பட்டு பராமரிக்கப்படும். ஆனால் அதற்கான நடவடிக்கையையும் தேனி மாவட்ட நிர்வாகம் எடுக்கவில்லை.

இதனால் மங்கலதேவி கண்ணகி கோயிலில் தமிழக உரிமை பறிபோகும் அபாயம் உள்ளது என்று தெரிவித்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →