தமிழ்நாடு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து உயர்வு

DIN

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,499 கன அடியாக அதிகரித்துள்ளது.

கடந்த இரண்டு நாள்களாக காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக அதிகரித்து வருகிறது.

நேற்று காலை வினாடிக்கு 216 கன அடியாக வந்து கொண்டிருந்த நீர்வரத்து இன்று காலை வினாடிக்கு 1499 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு  ஆயிரம் கன அடி வீதம் குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. 

குடிநீர் தேவைக்காக திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் நேற்று காலை 97.54அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 97.55அடியாக உயர்ந்துள்ளது. 

அணையின் நீர் இருப்பு 61.71 டி.எம்.சியாக இருந்தது.மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் அணையின் நீர்மட்டம் சரிவில் இருந்து மீண்டு உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் விண்ணப்பப் பதிவுக்கு என்னென்ன விவரங்கள் தேவை?

சேலத்தில் சூறைக்காற்று: 4 ஆயிரம் வாழைகள் சாய்ந்து சேதம்!

காஃப்காவின் வாசகி!

தி.நகர் மேம்பாலத்தில் டிசம்பருக்கு பின் போக்குவரத்துக்கு அனுமதி?

முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் காவல் மேலும் நீட்டிப்பு!

SCROLL FOR NEXT