முகப்பு
தமிழ்நாடு

சங்ககிரி: பேரூராட்சி பணியாளர்களுக்கு இலவச ஹோமியோபதி மாத்திரைகள் 

சங்ககிரி பப்ளிக் சேரிடபுள் டிரஸ்ட் சார்பில் ஹோமியோபதி மாத்திரைகள் இலவசமாக வழங்கும் நிகழ்ச்சி பேரூராட்சி அலுவலக வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:05 PM
இலவசமாக ஹோமியோபதி மாத்திரைகளை சுகாதார ஆய்வாளர் லோகநாதனிடம் வழங்கும் நிர்வாகிகள்.
பகிர்:

சேலம் மாவட்டம், சங்ககிரி பப்ளிக் சேரிடபுள் டிரஸ்ட் சார்பில் சங்ககிரி பேரூராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி தன்மையுடைய ஹோமியோபதி மாத்திரைகள் இலவசமாக வழங்கும் நிகழ்ச்சி பேரூராட்சி அலுவலக வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. 

சங்ககிரி பப்ளிக் சேரிடபுள் டிரஸ்ட் சார்பில் கரோனா தொற்று பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கையாக பேரூராட்சியில் பணிபுரியும் அலுவலர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி தன்மையுடைய ஆர்சனிக்கம் ஆல்பம் 30சி ஹோமியோபதி மாத்திரைகளை பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் லோகநாதனிடம்  டிரஸ்ட் தலைவர் ஏ.ஆனந்தகுமார் தலைமையில் நிர்வாகிகள் வழங்கினர். 

டிரஸ்ட் துணைத்தலைவர் எம்.பாலகிருஷ்ணன், செயலர் ஆர்.ராகவன், பொருளாளர் கணேஷ், நிர்வாகி முருகேசன், பேரூராட்சி சுகாதார மேற்பார்வையாளர்கள் சுரேஷ், வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →