சங்ககிரி: காவலர்களுக்கு இலவச ஹோமியோபதி மாத்திரைகள்
சங்ககிரியில் பல்வேறு காவல்நிலையத்தில் பணி புரியும் காவல்துறையினருக்கு நோய் எதிர்ப்புச் சக்தி தன்மையுடைய ஹோமியோபதி மாத்திரைகள் செவ்வாய்க்கிழமை இலவசமாக வழங்கப்பட்டது.
சேலம் மாவட்டம், சங்ககிரி பப்ளிக் சேரிடபுள் டிரஸ்ட் சார்பில் சங்ககிரியில் பல்வேறு காவல்நிலையத்தில் பணி புரியும் காவல்துறையினருக்கு நோய் எதிர்ப்புச் சக்தி தன்மையுடைய ஹோமியோபதி மாத்திரைகள் செவ்வாய்க்கிழமை இலவசமாக வழங்கப்பட்டது.
சங்ககிரி பப்ளிக் சேரிடபுள் டிரஸ்ட் சார்பில் கரோனா தொற்று பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கையாக சங்ககிரி துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், சங்ககிரி காவல் நிலையம், போக்குவரத்து காவல் நிலையம், மகளிர் காவல்நிலையம் ஆகியவற்றில் பணிபுரிந்து வரும் போலீஸாருக்கு நோய் எதிர்ப்புச் சக்தி தன்மையுடைய ஆர்சனிக்கம் ஆல்பம் 30சி ஹோமியோபதி மாத்திரைகளை அந்தந்த காவல்நிலைய போலீஸாரிடம் பப்ளிக் சேரிடபுள் டிரஸ்ட் தலைவர் ஏ.ஆனந்தகுமார் தலைமையில் வழங்கினார்.
துணைத்தலைவர் எம்.பாலகிருஷ்ணன், செயலர் ஆர்.ராகவன், பொருளாளர் கணேஷ் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.