சென்னையில் கரோனா சிகிச்சையைக் கண்காணிக்க அதிகாரி நியமனம்
சென்னையில் கரோனா சிகிச்சையைக் கண்காணிக்க தரேஸ் அகமது ஐஏஎஸ் என்பவர் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னையில் கரோனா சிகிச்சையைக் கண்காணிக்க தரேஸ் அகமது ஐஏஎஸ் என்பவர் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் செயல்படும் தனியார் மருத்துவமனைகளை கண்காணிக்க சிறப்பு அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் 5 மண்டலங்களில் அதிக அளவிலான மக்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
எனவே சென்னையில் கரோனா சிகிச்சையை கண்காணிக்க ஐஏஎஸ் அதிகாரியான தரேஸ் அகமது நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், கரோனா பணிக்காக ஒப்பந்த அடிப்படையில் 150 மருத்துவர்கள் மற்றும் 150 செவிலியர்கள் நியமிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.