முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் லேசான மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு புதன்கிழமை காலை 2469 கன அடியாக அதிகரித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:07 PM
மேட்டூர் அணை
பகிர்:


காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் லேசான மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு புதன்கிழமை காலை 2469 கன அடியாக அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் புதன்கிழமை காலை 97.68 அடியிலிருந்து 97.77 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 2018 கன அடியிலிருந்து 2469க ன அடியாக அதிகரித்துள்ளது. 

அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக  வினாடிக்கு  800 கனஅடி வீதம் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 61.98 டிஎம்சி ஆக உள்ளது.

ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 2,500 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் மெல்ல உயரத் தொடங்கியது.

முழு கட்டுரையைப் படிக்க →