முகப்பு
தமிழ்நாடு

கேரளத்திலிருந்து தமிழகம் வருவோருக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை கட்டாயம்: அமைச்சர் தகவல்

கேரளத்தில் இருந்து தமிழகம் வருவோருக்கு வருகிற 5 ஆம் தேதி முதல் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை சான்றிதழ் கட்டாயம் என மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:48 AM
சென்னை விமான நிலையத்தில் வெளிநாடு, வெளிமாநில பயணிகளுக்கு மேற்கொள்ளப்படும் பரிசோதனைகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
பகிர்:

கேரளத்தில் இருந்து தமிழகம் வருவோருக்கு வருகிற 5 ஆம் தேதி முதல் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை சான்றிதழ் கட்டாயம் என மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை விமான நிலையத்தில் வெளிநாடு, வெளிமாநில பயணிகளுக்கு மேற்கொள்ளப்படும் பரிசோதனைகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். 

அப்போது அவர், வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு விமான நிலையத்தில் 13 நிமிடங்களில் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை முடிவை அறிவிக்கும் நடைமுறை ஓரிரு நாளில் அமலுக்கு வரவுள்ளது. 

கேரளத்தில் கரோனா தொற்று அதிகரித்து வருவதையடுத்து கேரளத்தில் இருந்து தமிழகம் வருவோருக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை சான்றிதழ் கட்டாயமாக்கப்படுகிறது. வருகிற 5 ஆம் தேதி முதல் இது அமலுக்கு வருகிறது. தடுப்பூசி முழுமையாக செலுத்திக்கொண்டவர்களுக்கு பரிசோதனை கட்டாயமில்லை. 

இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றை காண்பித்தும் தமிழகத்திற்குள் வரலாம். ரயில் மூலமாக பயணம் மேற்கொள்வோருக்கும் இது பொருந்தும் என்று தெரிவித்தார். 

முழு கட்டுரையைப் படிக்க →