கருணாநிதி நினைவு நாள்: திருச்சியில் மரியாதை 
தமிழ்நாடு

கருணாநிதி நினைவு நாள்: திருச்சியில் மரியாதை

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூன்றாமாண்டு நினைவு நாளை முன்னிட்டு திருச்சியில் பல்வேறு இடங்களில் கருணாநிதியின் உருவப்படத்துக்கு திமுக-வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

DIN

திருச்சி: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூன்றாமாண்டு நினைவு நாளை முன்னிட்டு திருச்சியில் பல்வேறு இடங்களில் கருணாநிதியின் உருவப்படத்துக்கு திமுக-வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் உள்ள கருணாநிதியின் திரு உருவ சிலைக்கு மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். 

இந்நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் அன்பழகன், வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன், சட்டப் பேரவை உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன்,  ஸ்டாலின் குமார், பழனியாண்டி, ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தர்மன் ராஜேந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பெரியசாமி, இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில், மாவட்ட பொறுப்பாளரும், பள்ளிக்கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழிகாட்டுதலின் பேரில், அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் திருவுருவப் படத்திற்கு தலைமை செயற்குழு உறுப்பினர் கே என் சேகரன் தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் அமைந்துள்ள முழு உருவ சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் கோவிந்தராஜன், வண்ணை அரங்கநாதன், செந்தில், மலைக்கோட்டை பகுதி கழக செயலாளர் மதிவாணன் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர பகுதி பேரூர் கழக நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

இதேபோல, மாநகரின் பல்வேறு இடங்களிலும், வார்டுகளிலும் ஆங்காங்கே கருணாநிதியின் உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

கேட்பாரற்று கிடந்த 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

மேம்பாலம் கட்டுமானப் பணி: அமைச்சா் ஆய்வு

காவல் சாா்பு ஆய்வாளா் பணியிடத் தோ்வு: 864 போ் பங்கேற்பு!

தமிழகத்தின் ஆன்மாவாக இருப்பது ஆன்மிகம்: காஞ்சி சங்கராசாரியா் ஆசியுரை

SCROLL FOR NEXT