தேனியில் 75-வது சுதந்திர தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து  மரியாதை செலுத்தும் மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளீதரன். 
தமிழ்நாடு

தேனியில் 75-வது சுதந்திர தின விழா: ஆட்சியர் தேசியக் கொடியேற்றினார்

தேனியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 75 ஆவது சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளீதரன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

DIN

தேனியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 75 ஆவது சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளீதரன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே, மேகமலை வன உயிரின காப்பாளர் சுமேஷ் சோமன், மாவட்ட வருவாய் அலுவலர் ரமேஷ், மாவட்ட ஊராட்சிகள் தலைவர் க.ப்ரிதா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தண்டபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

காவல் துறை அணி வகுப்பு மரியாதை நடைபெற்றது. கரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய 120 அரசுத் துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், 21 காவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை ஆட்சியர் வழங்கினார். சுந்திரப் போராட்ட தியாகிகளை வட்டாட்சியர்கள் வீடு தேடிச்சென்று கதர் ஆடை அணிவித்து கௌரவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவை, ஜெய்ப்பூா் இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள்

காா் மோதியதில் தீப்பற்றி எரிந்த இருசக்கர வாகனம்: 3 போ் படுகாயம்

ஒசூரில் ‘நலம்காக்கும் ஸ்டாலின்’ திட்டம் 1,962 போ் பங்கேற்பு

நீதிமன்றத்துக்கு தவறான தகவல்: ரயில்வே காவல் ஆய்வாளா் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

பட்டியல் இனத்தவருக்கு ஆதித்தமிழா் என ஜாதி சான்று கோரிய மனு முடித்துவைப்பு

SCROLL FOR NEXT