முகப்பு
தமிழ்நாடு

கரோனா இரண்டாம் அலையில் தமிழகத்தில் மட்டும் 53 மருத்துவர்கள் பலி

கரோனா இரண்டாம் அலையின்போது தமிழகத்தில் மட்டும் 53 மருத்துவர்கள் பலியானதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

Updated On : 18 ஆகஸ்ட், 2021 at 5:44 PM
கரோனா இரண்டாம் அலையில் தமிழகத்தில் மட்டும் 53 மருத்துவர்கள் பலி
பகிர்:


சென்னை: கரோனா இரண்டாம் அலையின்போது தமிழகத்தில் மட்டும் 53 மருத்துவர்கள் பலியானதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்திய மருத்துவச் சங்கம் வெளியிட்ட புள்ளி விவரத்தின்படி, தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலைத் தொடங்கியது முதல் ஆகஸ்ட் முதல் வாரம் வரையிலான காலக்கட்டத்தில் 53 மருத்துவர்கள் பலியானதாகக் கூறப்பட்டுள்ளது.

நாட்டில் முதல் கரோனா அலையின்போது, தமிழகத்தில் மட்டும் 67 மருத்துவர்கள் பலியானதாகவும், இதனால், இவ்விரண்டு கரோனா அலைகளிலும் ஒட்டுமொத்தமாக 120 மருத்துவர்கள் பலியாகியிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

Advertisement

இந்திய மருத்துவச் சங்கத்தின் தமிழகத் தலைவர் டாக்டர் டி. ராமகிருஷ்ணன் கூறுகையில், இந்த புள்ளி விவரங்கள் கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி முதல் ஆகஸ்ட் முதல் வாரம் வரையில் திரட்டப்பட்டவை. இந்திய மருத்துவச் சங்கம், கரோனாவுக்கு பலியான மருத்துவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணமாக தலா ரூ.10 லட்சம் ரூபாய் வழங்கியது. தமிழக மருத்துவச் சங்கமும் கரோனாவுக்கு பலியான தமிழக மருத்துவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கியது என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.