தமிழ்நாடு

கொடநாடு விவகாரம்: ஆளுநருடன் ஓபிஎஸ் - ஈபிஎஸ் சந்திப்பு

DIN

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சந்தித்து வருகின்றனர்.

கொடநாடு கொள்ளை மற்றும் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான சயனிடம் கடந்த செவ்வாய்க்கிழமை காவல்துறையினர் மீண்டும் விசாரணை நடத்தினர்.

இதையடுத்து, கொடநாடு வழக்கு முடியவுள்ள நிலையில், தங்களது பெயர்களுக்கு களங்கள் விளைவிக்கும் வகையில் சதி நடப்பதாக நேற்று சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்ட அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

இந்நிலையில், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து இபிஎஸ் - ஓபிஎஸ் ஆகியோர் பேசி வருகின்றனர். 

இந்த சந்திப்பில், முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, சி.வி.சண்முகம், ஜெயக்குமார் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீபுரந்தீஸ்வரா்

தேய்பிறை அஷ்டமி வழிபாடு

விடுதிகளில் தங்கி விளையாட்டு பயிற்சி: மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

தளி, பாலக்கோடு அருகே யானை தாக்கியதில் விவசாயிகள் இருவா் பலி

கோடை வெப்பத்தைத் தணிக்க தொழிலாளா்களுக்கு குடிநீா், ஓஆா்எஸ் கரைசல் வழங்க வேண்டும்

SCROLL FOR NEXT