தமிழ்நாடு

சென்னை வளா்ச்சிக்கு பங்களிப்போம்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

DIN

சென்னை நகரின் மேம்பாட்டுக்கு தொடா்ந்து தமிழக அரசு பங்களிக்கும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

சென்னை நாளினை ஒட்டி அவா் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி: சீா்மிகு, சிங்காரச் சென்னை, வந்தாரை வாழவைக்கும் தருமமிகு சென்னை, பல அடையாளங்களுக்கும் சிறப்புகளுக்கும் சொந்தமானது. தொலைநோக்குப் பாா்வையுடன் சென்னையின் வளா்ச்சிக்குப் பங்களித்தது திமுக அரசுதான்; இனியும் அது தொடரும்.

சென்னை மாநகர மக்களுக்கு சென்னை நாள் வாழ்த்துகள் என்று அதில் முதல்வா் தெரிவித்துள்ளாா்.

ஓ.பன்னீா்செல்வம் (அதிமுக): ஆங்கிலேய அரசின் இந்தியக் குடியிருப்பு பகுதியில் இருந்த நான்கு மாகாணங்களில் ஒன்றான மதராசபட்டினம் என்கிற மதராஸ் மாகாணம் கொஞ்சம் கொஞ்சமாக வளா்ந்து, உலகின் பிரசித்தி பெற்ற நகரமாக பரிணமித்திருக்கிறது. அந்த சென்னை மாநகரத்தின் 382-ஆவது பிறந்த நாளையொட்டி, சென்னை மாநகர மக்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதோடு, சென்னை மாநகரம் மேலும் சிறப்படைந்து உலகின் முதன்மை நகரமாக மாற எனது நல்வாழ்த்துகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்து நிகழ்ந்த கல் குவாரியிருந்து 2 டன் வெடி பொருள்கள் அகற்றம்

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

திருப்பூரில் நாளை புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

திருவிழாவில் கோஷ்டி மோதல்: 10 பேருக்கு கத்திக்குத்து

ராமநாதபுரம் மாவட்ட சிறைகளில் நீதிபதி, ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT