முகப்பு
தமிழ்நாடு

கூடலூர் அருகே யானை தாக்கி வீடு சேதம்

நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்துள்ள நாடு காணி பகுதிக்கு நள்ளிரவு 2 மணிக்கு வந்த காட்டு யானை அங்கு வசிக்கும் தங்கராஜ் என்பவரது வீட்டை தாக்கி சேதப்படுத்தியது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:59 AM
கூடலூர் அருகே யானை தாக்கி வீடு சேதம்
பகிர்:


கூடலூர் : நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்துள்ள நாடு காணி பகுதிக்கு நள்ளிரவு 2 மணிக்கு வந்த காட்டு யானை அங்கு வசிக்கும் தங்கராஜ் என்பவரது வீட்டை தாக்கி சேதப்படுத்தியது.

யானை வீட்டை இடிப்பதையறிந்த தங்கராஜ் சத்தமிட்டு அக்கம்பக்கம் உள்ளவர்களை உதவிக்கு அழைத்துள்ளார்.

அருகிலிருந்தவர்கள் ஒன்றுகூடி சத்தமிட்டுள்ளனர். தங்கராஜ் அந்த நேரத்தில் குடும்பத்துடன் தப்பி அருகிலிருந்த வீட்டுக்கு ஓடிவிட்டார். இதனால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

யானை வீட்டிலிருந்த பொருள்களை எல்லாம் சேதப்படுத்தி விட்டுச்சென்றுள்ளது. 
 

முழு கட்டுரையைப் படிக்க →