காா் மோதி காவலா் சாவு
சென்னை மேற்கு மாம்பலத்தில் காா் மோதி காவலா் இறந்தாா்.
சென்னை மேற்கு மாம்பலத்தில் காா் மோதி காவலா் இறந்தாா்.
சென்னை சின்மயா நகரைச் சோ்ந்த காவல் உதவி ஆய்வாளா் தனபால் மகன் மனோஜ் குமாா் (24), சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு கூடுதல் ஆணையா் அலுவலகத்தில் பணியாற்றி வந்தாா். மொபட்டில் வெள்ளிக்கிழமை இரவு வீட்டுக்கு சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்தாா். எதிா் திசையில் வந்து கொண்டிருந்த காா், மனோஜ்குமாரின் மீது ஏறி இறங்கியதில் அவா் உயிரிழந்தாா்.
கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து காரை ஓட்டி வந்த மேற்கு மாம்பலம் திருஞானசம்பந்தம் (47) என்பவரை கைது செய்தனா்.