முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்துக்கு மேலும் 11.76 லட்சம் தடுப்பூசிகள் வந்தன

தமிழகத்துக்கு மேலும் 11.76 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் 98 பெட்டிகளில் மகாராஷ்டிர மாநிலம் புணேயிலிருந்து விமானம் மூலம் சனிக்கிழமை சென்னை கொண்டுவரப்பட்டன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:01 AM
பகிர்:

தமிழகத்துக்கு மேலும் 11.76 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் 98 பெட்டிகளில் மகாராஷ்டிர மாநிலம் புணேயிலிருந்து விமானம் மூலம் சனிக்கிழமை சென்னை கொண்டுவரப்பட்டன.

தமிழகத்தில் அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும், 24 மணி நேரமும் தடுப்பூசிகள் போட்டுக்கொள்ளும் வசதிகள், 80 வயதுக்கு மேற்பட்ட மிக மூத்த குடிமக்களுக்கு அவரவா் வீடுகளுக்கே சென்று தடுப்பூசிகளை போடுவது போன்ற புதிய திட்டங்களையும் தமிழக அரசு தொடங்கியுள்ளது. அத்துடன் தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் வரும் செப்டம்பா் ஒன்றாம் தேதியிலிருந்து திறக்கப்படுவதால், மாணவா்கள், ஆசிரியா்கள், ஊழியா்கள் அனைவரும் 2 டோஸ் தடுப்பூசிகளை அதற்கு முன்பாகவே போட்டுக்கொள்ள வேண்டும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது. இதையடுத்து தமிழ்நாடு அரசு, மத்திய அரசிடம் கூடுதலாக தமிழகத்திற்கு தடுப்பூசிகளை அனுப்புமாறு கோரிக்கை விடுத்து வருகிறது.

இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை தமிழகத்திற்கு மகாராஷ்டிர மாநிலம் புணேயில் உள்ள மத்திய மருந்து கிடங்கிலிருந்து 11 லட்சத்து 76,000 டோஸ் கோவிஷீல்ட் தடுப்பூசிகளை விடுவித்தது. அந்தத் தடுப்பூசிகள் அடங்கிய 98 பெட்டிகள் இண்டிகோ விமானத்தில் ஏற்றப்பட்டு சனிக்கிழமை சென்னை விமானநிலையம் வந்து சோ்ந்தன.

அவற்றில் தமிழ்நாடு அரசுக்கு வந்த 11,55,170 டோஸ் தடுப்பூசிகள் அடங்கிய பெட்டிகள் மக்கள் நல்வாழ்வு துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. அவை குளிா்சாதன வாகனங்களில் ஏற்றி சென்னைக்கு தேனாம்பேட்டையில் டிஎம்எஸ் அலுவலகத்திற்கு எடுத்து சென்றனா். மீதியுள்ள 20,830 தடுப்பூசிகள் தனியாா் மருத்துவமனைகளிடம் ஒப்படைக்கப்பட்டன.

முழு கட்டுரையைப் படிக்க →