முகப்பு
தமிழ்நாடு

திருச்சியில் கிரேன் விழுந்து ஒருவர் பலி: மற்றொருவர் காயம்

திருச்சியில் கிரேன் விழுந்த விபத்தில் ஒருவர் பலியானார். மற்றொருவர் காயம் அடைந்தார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:01 AM
பகிர்:

திருச்சியில் கிரேன் விழுந்த விபத்தில் ஒருவர் பலியானார். மற்றொருவர் காயம் அடைந்தார்.

திருச்சி புத்தூர் நால்ரோடு பகுதியில் தனியார் கட்டடப் பணிகள் நடந்து வருகின்றன. இங்கு ஞாயிற்றுக்கிழமை நடந்த பணியின்போது கிரேன் விழுந்து விபத்துக்குள்ளானது.

இதில் திருச்சி காந்தி மார்க்கெட் வாழைக்காய் மண்டி பகுதியைச் சேர்ந்த ந. செல்வகுமார்(25) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சோமரசம்பேட்டை வாசன் சிட்டி பகுதியைச் சேர்ந்த உ.சரவணகுமார்(25) படுகாயமடைந்து திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து திருச்சி உறையூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்த செல்வகுமாருக்கு விஷ்ணுப்பிரியா என்ற மனைவியும் நித்தின் கிரிஷ் என்ற மகனும் உள்ளனர். 

முழு கட்டுரையைப் படிக்க →