தமிழ்நாடு

மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை

DIN

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஆலோசனை நடத்தி வருகிறார்.

தமிழகம் முழுவதும் நாளை மறுநாள் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட உள்ளனர். எனினும், கரோனா தடுப்பூசி செலுத்திய ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாவட்டங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி, கல்லூரி மாணவர்கள் மற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் விரைவாக தடுப்பூசி செலுத்துவது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் வெ.இறையன்பு காணொலி வாயிலாக ஆலோசனை நடத்துகிறார்.

முன்னதாக, பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் இன்று காலை தலைமைச் செயலாளர் ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போக்ஸோவில் 20 ஆண்டுகள் தண்டனை பெற்றவா் விடுதலை: பாதிக்கப்பட்ட பெண்ணையே மணந்ததால் நிவாரணம்

பட்டம் பெறுவதோடு கற்றல் முடிந்துவிடுவதில்லை: மாநில தகவல் ஆணையா் செல்வராஜ் கருத்து

ஆப்கன்: கனமழைக்கு 300 போ் உயிரிழப்பு

விமானத்தில் மது அருந்திய நபா் கைது

இன்று செங்கல்பட்டுக்கு மின் ரயில்கள் இயங்காது

SCROLL FOR NEXT