ஆத்தூரில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி எம்ஜிஆர் சிலை சேதம் 
தமிழ்நாடு

ஆத்தூரில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி எம்ஜிஆர் சிலை சேதம்

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி எம்ஜிஆர் சிலை சேதமடைந்தது.

DIN

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி எம்ஜிஆர் சிலை சேதமடைந்தது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் சாரதா ரவுண்டானாவில் அதிமுக நிறுவனர் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் திருஉருவ சிலை உள்ளது. செவ்வாய்க்கிழமை அதிகாலை அவ்வழியே சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதி எம்ஜிஆர் திருஉருவ சிலை வலது கை மற்றும் ஏணிப்படிகள் சேதமடைந்துள்ளது.

இது குறித்து தகவலறிந்த ஆத்தூர் நகர செயலாளர் அ.மோகன் தலைமையில் ஆத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.பி.ஜெயசங்கரன், நரசிங்கபுரம் நகர செயலாளர் எஸ்.மணிவண்ணன் ஆகியோர் தலைமையில் அதிமுகவினர் 200க்கும் மேற்பட்டோர் அப்பகுதியில் குவிந்தனர்.

இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. தகவறிந்த ஆத்தூர் நகர காவல் உதவி ஆய்வாளர் எஸ்.மூர்த்தி தலைமையிலான காவல்துறையினர் அதிமுகவினரிடையே பேசி சிசிடிவி கேமிரா உதவியுடன் மோதிய வாகனத்தை கண்டுபிடித்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகார் தேர்தல்: பாஜக 101, ஐக்கிய ஜனதா தளம் 101 தொகுதிகளில் போட்டி!

உலகக் கோப்பை: ஸ்மிருதி, பிரதீகா அசத்தல்; ஆஸி.க்கு 331 ரன்கள் இலக்கு!

இந்த வராம் கலாரசிகன் - 12-10-2025

பொறியாளர்கள் பணிக்கான தேர்வு: யுபிஎஸ்சி அறிவிப்பு

பழந்தமிழரின் காலநிலை அறிவு!

SCROLL FOR NEXT