தமிழ்நாடு

தமிழகம்-கேரளம் பேருந்து போக்குவரத்து தொடக்கம்!

DIN


பொள்ளாச்சி:  ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தமிழகம்-கேரளம் பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகிறது. 

கரோனா பெருந்தொற்று காரணமாக தமிழகம்-கேரளம் இடையே பேருந்து சேவை நிறுத்தப்பட்டிருந்தது. 

இந்நிலையில், இன்று புதன்கிழமை முதல் பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சியில் இருந்து பாலக்காட்டுக்கு இரண்டு பேருந்துகளும், தத்தம் மங்களத்திற்கு ஒரு பேருந்தும், பரம்பிகுளத்துக்கு ஒரு பேருந்தும், குருவாயூருக்கு இரண்டு பேருந்துகளும், திருச்சூருக்கு ஒரு பேருந்து என ஏழு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 

அதேபோல் கேரள அரசு பேருந்துகள் 10க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. காலை 10 மணிக்கு முன்பு தனியார் பேருந்து ஒன்றும் இயக்கப்பட்டுள்ளது. 

தமிழகம்-கேரளம் இடையே பேருந்து சேவை தொடங்க வேண்டும் என்று கேரளம் மாநில தமிழ் பாதுகாப்பு இயக்கம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தது குறிப்பிடத்தக்கது.

இயக்கத்தின் தலைவர் பேச்சிமுத்து கூறுகையில், தமிழகம்-கேரளம் இடையே பேருந்து சேவை நிறுத்தப்பட்டு இருந்ததால் மக்கள் பாதிப்பு அடைந்தனர். தற்போது பேருந்துகள் இயக்கப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழக-கேரள அரசுகளுக்கு நன்றி, மொழிச் சிறுபான்மை ஆணையருக்கும் நன்றி என்று தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி விபத்து: ஒருவர் பலி!

அடுத்த 5 நாள்களில் வெயில் படிப்படியாகக் குறையும்!

மாணவரை நிர்வாணப்படுத்தி தாக்குதல் - கான்பூரில் 6 பேர் கைது

அரண்மனை - 4 வசூல் இவ்வளவா?

ஒளரங்காபாத், உஸ்மானாபாத் பெயர் மாற்றத்துக்கு எதிர்ப்பு: உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தள்ளுபடி

SCROLL FOR NEXT