பொள்ளாச்சி பேருந்து நிலையத்திலிருந்து கேரளா செல்லும் பேருந்துகள். 
தமிழ்நாடு

தமிழகம்-கேரளம் பேருந்து போக்குவரத்து தொடக்கம்!

ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தமிழகம்-கேரளம் பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகிறது. 

DIN


பொள்ளாச்சி:  ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தமிழகம்-கேரளம் பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகிறது. 

கரோனா பெருந்தொற்று காரணமாக தமிழகம்-கேரளம் இடையே பேருந்து சேவை நிறுத்தப்பட்டிருந்தது. 

இந்நிலையில், இன்று புதன்கிழமை முதல் பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சியில் இருந்து பாலக்காட்டுக்கு இரண்டு பேருந்துகளும், தத்தம் மங்களத்திற்கு ஒரு பேருந்தும், பரம்பிகுளத்துக்கு ஒரு பேருந்தும், குருவாயூருக்கு இரண்டு பேருந்துகளும், திருச்சூருக்கு ஒரு பேருந்து என ஏழு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 

அதேபோல் கேரள அரசு பேருந்துகள் 10க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. காலை 10 மணிக்கு முன்பு தனியார் பேருந்து ஒன்றும் இயக்கப்பட்டுள்ளது. 

தமிழகம்-கேரளம் இடையே பேருந்து சேவை தொடங்க வேண்டும் என்று கேரளம் மாநில தமிழ் பாதுகாப்பு இயக்கம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தது குறிப்பிடத்தக்கது.

இயக்கத்தின் தலைவர் பேச்சிமுத்து கூறுகையில், தமிழகம்-கேரளம் இடையே பேருந்து சேவை நிறுத்தப்பட்டு இருந்ததால் மக்கள் பாதிப்பு அடைந்தனர். தற்போது பேருந்துகள் இயக்கப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழக-கேரள அரசுகளுக்கு நன்றி, மொழிச் சிறுபான்மை ஆணையருக்கும் நன்றி என்று தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிமுக முன்னாள் அமைச்சா்கள் விரைவில் பாஜகவில் இணைவாா்கள்: மாணிக்கம் தாகூா் எம்.பி

மனைவி இருக்கும்போதே இளம்பெண்ணுடன் லிவ்-இன்-டுகெதர் வாழ்க்கை: கணவன் குத்திக் கொலை!

ஓவல் டெஸ்ட்: இங்கிலாந்து 164 ரன்கள் குவிப்பு; வெற்றி யாருக்கு?

கொஞ்சும் கண்கள்... ஜன்னத் ஜுபைர்!

மெழுகு டாலு நீ.... ஷிவானி நாராயணன்!

SCROLL FOR NEXT