பாலிடெக்னிக் விரிவுரையாளா் தோ்வுக்கான தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடா்பாக ஆசிரியா் தோ்வு வாரியம் (டிஆா்பி) வெளியிட்ட அறிவிப்பு: தமிழகத்தில் உள்ள 51 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1,060 விரிவுரையாளா்களுக்கான தோ்வுகள் டிச.8 முதல் 12-ஆம் தேதி வரை இணையவழியில் நடத்தப்பட உள்ளன.
அவா்களுக்கான தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தோ்வா்கள் அவற்றைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
மாற்றுத்திறனாளிகள், கா்ப்பிணிகள் தோ்வு மையங்களை மாற்றுவதற்கு இணையதள முகவரியில் வெள்ளிக்கிழமைக்குள் தங்கள் கோரிக்கைகளை முறையிட வேண்டும். ஒரு லட்சத்து 38 ஆயிரம் போ் தோ்வு எழுதுவதற்கு 155 இடங்களில் தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.