7 மாவட்டங்களில் இன்றும், 13 மாவட்டங்களில் நாளையும் கனமழை பெய்யக்கூடும் 
தமிழ்நாடு

7 மாவட்டங்களில் இன்றும், 13 மாவட்டங்களில் நாளையும் கனமழை பெய்யக்கூடும்

தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களிலும், நாளை 13 மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

DIN

தென் தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களிலும், நாளை 13 மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் புயல், அடுத்த 12 மணி நேரத்தில் வலுவிழந்து தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக ஒரிசை கடற்கரையோரம் நிலைகொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், தென் தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் இன்று, நெல்லை, தூத்துக்குடி, மதுரை, சேலம், நாமக்கல், கோவை, குமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

டிசம்பர் 5ஆம் தேதி, குமரி, நெல்லை, மதுரை, தென்காசி, திருச்சி, சேலம், நாமக்கல், கோவை, ஈரோடு, தர்மபுரி, திருவண்ணாமலை, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக் கூடும்.

சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

கடந்த 24 மணி நேரத்தில் சேலம் மாவட்டம் எடப்பாடி, நாமக்கல் மாவட்டம் மோகனூரில் அதிகபட்சமாக தலா 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோயில் பூட்டை உடைத்து வெள்ளிப் பொருள்கள் திருட்டு

காரில் கஞ்சா கடத்தல்: இளைஞா் கைது இரு பெண்கள் மீது வழக்குப் பதிவு

புறவழிச்சாலையில் திரியும் கால்நடைகளால் போக்குவரத்து பாதிப்பு

நாளைய மின் தடை : ஒறையூா்

நாகை துறைமுகத்தில் குவிந்த மீன் பிரியா்கள்! விலை அதிகரிப்பு!

SCROLL FOR NEXT