தமிழ்நாடு

தில்லியிலிருந்து வந்தவர்கள் பட்டியல்: விபத்தில் சிக்கினார்களா?

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் விமானப்படை உயர் அதிகாரிகள் சென்ற விமானப் படை ஹெலிகாப்டர்  விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

DIN

குன்னூர்: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் ராணுவ உயர் அதிகாரிகள் சென்ற விமானப் படை ஹெலிகாப்டர்  விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் சிக்கிய விமானப்படை ஹெலிகாப்டரில் முப்படைத் தலைமை தளபதி விபின் ராவத், அவரது மனைவி மற்றும் உயர் அதிகாரிகள் பயணித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்நிலையில், விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் சென்ற பயணிகளின் விவரம் வெளியாகியுள்ளது. 

அதாவது தில்லியில் இருந்து சூலூர் சென்ற ஹெலிகாப்டரில் முப்படைத் தலைமை தளபதி விபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத், லெப்டினன்ட் கர்னல் ஹஜிந்தர் சிங் உள்ளிட்டோர் பயணித்துள்ளனர். 

வெலிங்டன் ராணுவக் கல்லூரி ஆய்வுக்காக கோவையிலிருந்து சென்ற ஹெலிகாப்டர், குன்னூர் அருகே விபத்தில் சிக்கியது. இதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். ராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் மீட்புப் பணியில்  ஈடுபட்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் நடந்தது பயங்கரவாதத் தாக்குதல்! - அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் கருத்து

தில்லி கார் குண்டு வெடிப்பு! உமர் டைரி சிக்கியது; மீண்டும் மீண்டும் எழுதப்பட்டிருக்கும் ஒரு வார்த்தை?

கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: குற்றஞ்சாட்டப்பட்டவர் சிறையில் அடைப்பு!

சிதம்பரம் ஸ்ரீசிவகாமசுந்தரி அம்மன் கோயிலில் தேரோட்டம்!

தில்லி அருகே மீண்டும் வெடி சப்தம்; அலறிய மக்கள்! என்ன நடந்தது?

SCROLL FOR NEXT