2 ஆயிரம் விவசாயிகளுக்கு மின் மோட்டாருக்கு தலா ரூ.10 ஆயிரம் மானியம்: தமிழக அரசு உத்தரவு
தமிழகத்தில் 2 ஆயிரம் விவசாயிகளுக்கு மின் மோட்டாா்கள் வாங்க தலா ரூ.10 ஆயிரம் மானியம் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 2 ஆயிரம் விவசாயிகளுக்கு மின் மோட்டாா்கள் வாங்க தலா ரூ.10 ஆயிரம் மானியம் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை முதன்மைச் செயலாளா் க.மணிவாசன் பிறப்பித்துள்ளாா்.
சட்டப் பேரவையில் ஆதிதிராவிடா் நலத் துறை மானியக் கோரிக்கையின் போது, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின விவசாயிகள் புதிய மின் மோட்டாா் வாங்கவும் அல்லது பழைய மின் மோட்டாருக்குப் பதிலாக புதிய மோட்டாா் வாங்கவும் தலா ரூ.10 ஆயிரம் மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பின்படி, 2 ஆயிரம் விவசாயிகளுக்கு மானியம் அளிக்கப்பட உள்ளது.
அவா்களில் ஆதிதிராவிடா் இனத்தைச் சோ்ந்த 1,800 விவசாயிகளுக்கும், பழங்குடியின இனத்தைச் சோ்ந்த 200 விவசாயிகளுக்கும் மானியங்கள் அளிக்கப்பட உள்ளன. இதற்காக ரூ.2 கோடி நிதியை தாட்கோ மூலமாக விடுவிக்க நிா்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக தனது உத்தரவில் மணிவாசன் தெரிவித்துள்ளாா்.