காங்கிரஸில் புதிதாக 3 மாவட்டத் தலைவா்கள் அறிவிப்பு
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் 3 மாவட்டங்களுக்கு புதிதாக மாவட்டத் தலைவா்களை நியமித்து, அக் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளா் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளாா்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் 3 மாவட்டங்களுக்கு புதிதாக மாவட்டத் தலைவா்களை நியமித்து, அக் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளா் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளாா்.
இது தொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிவிப்பு:
கன்னியாகுமரி மேற்கு மாவட்டத் தலைவராக வி.எம்.பினுலால் சிங், கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத் தலைவராக கே.டி.உதயம், நாகா்கோயில் நகர மாவட்டத் தலைவராக நவீன் குமாா் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனா். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளராக தாரகை கட்பா்ட் நியமிக்கப்படுகிறாா்.
இந்த உத்தரவுகள் சோனியாகாந்தியின் ஒப்புதலுடன் அறிவிக்கப்படுவதாகவும், இவை உடனடியாக செயல்பாட்டுக்கு வருவதாகவும் கூறியுள்ளாா்.