தமிழ்நாடு

நகைக்கடன் முறைகேடு: இடைநீக்கம் செய்யப்பட்ட கூட்டுறவு வங்கிச் செயலர் தூக்கிட்டுத் தற்கொலை

DIN

புதுக்கோட்டை: நகைக்கடன் முறைகேட்டில் இடைநீக்கம் செய்யப்பட்ட கூட்டுறவு வங்கிச் செயலர் அவரது வீட்டின் கழிப்பறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் தொடக்கக் கூட்டுறவு வேளாண்மை மற்றும்ஊரக வளர்ச்சி வங்கியில் நடைபெற்ற நகைக்கடன் பொட்டலங்கள் ஆய்வு செய்யப்பட்டபோது ரூ. 1.08 கோடி மதிப்பில் 102 பொட்டலங்கள் இருப்பில் இல்லை.

இதைத்தொடர்ந்து வங்கிச் செயலர் பி. நீலகண்டன் (53) மற்றும் மேற்பார்வையாளர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். நகை மதிப்பீட்டாளர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில், இடைநீக்கம் செய்யப்பட்ட செயலர் பி. நீலகண்டன் புதன்கிழமை காலை கீரனூர் சிவன்தெருவிலுள்ள அவரது வீட்டின் கழிப்பறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தகவலறிந்து வந்த கீரனூர் போலீஸார், சடலத்தைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

SCROLL FOR NEXT