காங்கயத்தில் நடைபெற்ற பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்றோர்.  
தமிழ்நாடு

பிளாஸ்டிக் மாசில்லா தமிழகம்: காங்கயத்தில் விழிப்புணர்வு பேரணி

பிளாஸ்டிக் மாசு இல்லாத தமிழகம் என்னும் முழக்கத்தை முன்னிறுத்தி, விழிப்புணர்வுப் பேரணி காங்கயத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

DIN



காங்கயம்: பிளாஸ்டிக் மாசு இல்லாத தமிழகம் என்னும் முழக்கத்தை முன்னிறுத்தி, விழிப்புணர்வுப் பேரணி காங்கயத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம், காங்கயம் நகராட்சி அலுவலகத்தில் இருந்து, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருள்களுக்கு எதிராகப் புறப்பட்ட இந்தப் பேரணியை நகராட்சி ஆணையர் எஸ்.வெங்கடேஸ்வரன் கொடியசைத்துத் துவக்கி வைத்தார். 

காங்கயத்தில் நடைபெற்ற பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள்.

இதில், காங்கயம் கார்மல் மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு, விழிப்புணர்வு பாதைகளை ஏந்தி வந்தனர். நகராட்சி அலுவலகம், பேருந்து நிலையம், காவல் நிலைய ரவுண்டானா வழியாக வந்து, நகராட்சி அலுவலக வளாகத்தில் பேரணி நிறைவடைந்தது.

இந்த நிகழ்ச்சியில், காங்கயம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ்.செந்தில்குமார், மேலாளர் சகுந்தலா, நகராட்சி வருவாய் ஆய்வாளர் செல்வகுமார், கார்மல் பள்ளித் தலைமையாசிரியர் சாந்தி அமலோர், உடற்கல்வி ஆசிரியர் எஸ்.செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”கர்வமில்லாத மனிதர் நல்லகண்ணு!” நடிகர் எம்.எஸ். பாஸ்கர் மரியாதை!

கோடிங் டெவலப்பர்கள் பற்றி ஸ்ரீதர் வேம்பு கருத்து!

தஞ்சாவூர் மாவட்டத்துக்கு மார்ச் 2ல் உள்ளூர் விடுமுறை!

ஃபியூச்சர்ஸ் வர்த்தகத்தில் வெள்ளி கிலோவுக்கு ரூ. 3,264 ஆக சரிவு!

கா்நாடக சுகாதாரத் துறையில் மருந்து பற்றாக்குறை: பாஜக விஜயேந்திரா கண்டனம்

SCROLL FOR NEXT