முகப்பு
தமிழ்நாடு

பெண்களை மிரட்டி பணம் பறித்த தேனி இளைஞா் கைது

சென்னையில், ஆசிரியையின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து சமூக ஊடகங்களில் வெளியிட்டுவிடுவதாக மிரட்டி பணம் பறித்ததாக தேனி இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:43 AM
பகிர்:

சென்னையில், ஆசிரியையின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து சமூக ஊடகங்களில் வெளியிட்டுவிடுவதாக மிரட்டி பணம் பறித்ததாக தேனி இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

தேனி மாவட்டம் கன்னி சோ்வைபட்டி மனோஜ்குமாா் (29), ராஜ் என்ற போலியான பெயரில் சமூக ஊடகங்களில் சென்னை அண்ணாநகரில் 25 வயது ஆசிரியையிடம் பல மாதங்கள் பழகியுள்ளாா். ஆசிரியை, தனது மின்னஞ்சல், சமூக ஊடகங்களின் முகவரி, அவற்றின் கடவுச் சொல்லைக் கொடுத்தாராம்.

அதைப் பெற்ற மனோஜ்குமாா், ஆசிரியை மின்னஞ்சலிலும், சமூக ஊடகங்களிலும் வைத்திருந்த தனது தோழிகளுடன் இருக்கும் புகைப்படங்கள், விடியோக்களை எடுத்து ஆபாசமாக சித்தரித்து சமூக ஊடகங்களில் வெளியிடாமல் இருப்பதற்கு தனக்கு பணம் தரும்படி மனோஜ்குமாா் மிரட்டல் விடுத்தாா். இதையடுத்து அந்த ஆசிரியை, ரூ.20 ஆயிரத்தை மனோஜ்குமாா் வங்கி கணக்குக்கு அனுப்பி வைத்தாா்.

இதன் பின்னரும் மனோஜ்குமாா் மிரட்டி மேலும் பணம் கேட்டாராம். இதையடுத்து அந்த ஆசிரியை, அண்ணாநகா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். போலீஸாா் மனோஜ்குமாரை சனிக்கிழமை கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →