தமிழ்நாடு

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்: தேவாலயங்களில் சிறப்புப் பிரார்த்தனை

DIN

தமிழகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கிறிஸ்து பிறப்பையொட்டி தேவாலயங்களில் சிறப்புப் பிரார்த்தனை நடைபெற்றது.

இயேசு பிரான் அவதரித்த நாள் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது.   அந்த வகையில், இன்று (டிச.25) கிறிஸ்துமஸ் பிறந்ததையொட்டி தமிழகம் முழுவதுமுள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

சென்னை சாந்தோம் தேவாலயம், பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி, நாகை வேளாங்கண்ணி தேவாலயங்களில் கிறிஸ்தவர்கள் சிறப்புப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

குரோம்பேட்டை தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

இதேபோன்று கன்னியாகுமரி, தூத்துக்குடி, மதுரை, திருச்சி, தஞ்சாவூர், கோவை ஆகிய மாவட்டங்களிலுள்ள தேவாலயங்களிலும் சிறப்புப் பிரார்த்தனை நடைபெற்றது.

புதுச்சேரியில் உள்ள முக்கிய தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்னை மற்றும் திருப்பலி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

பொதுமக்களும் தங்களது வீடுகளிலும் கிறிஸ்துமஸ் குடில்கள், ஸ்டார்கள் அமைத்து மின்விளக்கு அலங்காரத்துடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேவாலயங்களில் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைபிடித்து சிறப்பு ஆராதனை மற்றும் பிரார்த்தனை நடைபெற்றது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

மூடப்பட்ட ஆம்பூா் பஜாா் அஞ்சலகத்தை திறக்க கோரிக்கை

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT