குடியாத்தம் அருகே லேசான நில அதிர்வு
குடியாத்தம் அருகே கிராம பகுதிகளில் சனிக்கிழமை லேசான நில அதிர்வு ஏற்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குடியாத்தம் அருகே கிராம பகுதிகளில் சனிக்கிழமை லேசான நில அதிர்வு ஏற்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம், குடியாத்தம் அருகே பேரணாம்பட்டில் சனிக்கிழமை காலை திடீரென இரண்டு முறை சுமார் 3 வினாடிகள் நில அதிர்வை உணர்ந்ததாக அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் தெரிவித்தனர்.
நில அதிர்வு என்று அறிந்தவுடன் அச்சத்தின் காரணமாக தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் நின்று கொண்டனர்.
மாவட்டத்தில் மூன்றாவது முறையாக நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கடந்த நவம்பர் 29, டிசம்பர் 23 ஆகிய தேதிகளில் நில அதிர்வு உணரப்பட்ட நிலையில் மீண்டு நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிக்க | திருவலம் ரயில்வே பாலம் சீரமைப்புப் பணி 60% நிறைவு: அதிகாரிகள் தகவல்