முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் கனமழை: 3 சுரங்கப்பாதைகள் மூடல்

சென்னையில் கனமழை காரணமாக 3 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:48 AM
பகிர்:

சென்னையில் கனமழை காரணமாக 3 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன.
இதுகுறித்து சென்னை பெருநகரபோக்குவரத்து காவல் வெளியிட்ட செய்திக்குறிப்பில், 
இன்று (30.12.2021) சென்னையில் பெய்த மழையையொட்டி சென்னை பெருநகர போக்குவரத்தின் தற்போதைய நிலவரம்.
1. மழை நீர் பெருக்கு காரணமாக மூடப்பட்டுள்ள சுரங்கப்பாதைகள்:-
• கெங்கு ரெட்டி சுரங்கபாதை
• துரைசாமி சுரங்கபாதை
• ஆர்.பி.ஐ சுரங்கபாதை
2. மழைநீர் தேங்கியுள்ளதால் கீழ்கண்ட சாலைகளில் போக்குவரத்து மெதுவாக செல்கின்றன,
• கே,கே நகர் - ராஜ மன்னார் சாலை
• மயிலாப்பூர் - டாக்டர் சிவசாமி சாலை
• ஈ வி ஆர் சாலை - காந்தி இர்வின் சந்திப்பு முதல் டாக்டர் நாயர் பாலம் வரை
• செம்பியம் - ஜவஹர் நகர் 80 அடி சாலை
• குளத்தூர் விநாயகபுரம் – ரெஹில்ஸ் ரோடு
• 100 அடி சாலை பெரியார் பாதை
• நுங்கம்பாக்கம் லேக் வியூ ரோடு
• சாந்தோம் கட்சேரி ரோடு அருகில்.
• ராஜரத்தினம் ஸ்டேடியம்
• ஈ.வி,ஆர் சாலை- ஈ.வி,கே சம்பத் ரோடு முதல் காந்தி இர்வின் வரை,
• அசோக்நகர் 70 அடி சாலை
• கொடுங்கையூர் வீட்டு வசதி வாரியம் அருகில்,
•  பெரியமேடு காவல்நிலையம் அருகில்.
•  ஜோன்ஸ் ரோடு
3. சாலையில் பள்ளம்:- இல்லை
4. மாநகர பேருந்து போக்குவரத்து மாற்றம்:- இல்லை
5. மரங்கள் ஏதும் விழவில்லை.
சென்னை பெருநகரில் மழைநீர் தேங்கியுள்ள சுரங்கபாதை மற்றும் சாலைகளில் உள்ள மழைநீரை மோட்டார் பம்ப் செட்கள் மூலம் வெளியேற்றும் பணி
நடைபெற்று வருகிறது,
வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் தாங்கள் செல்லும் இடங்களுக்கு தகுந்தாற்போல் சாலைகளை தேர்ந்தெடுத்து
கவனமாக செல்லுமறு அறிவுறுத்தப்படுகிறது, இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.