தமிழகம், புதுச்சேரியில் வளி மண்டல காற்றழுத்த சுழற்சி காரணமாக வியாழக்கிழமை முதல் மூன்று நாள்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்த நிலையில், புதுச்சேரியில் வியாழக்கிழமை பிற்பகல் திடீர் மழை பெய்ய தொடங்கி பெய்து வருவதால் புத்தாண்டு கொண்டாட்டம் கலையிழக்குமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கிய மழை அரை மணி நேரமாக பரவலாக பெய்து வருகிறது.
இதையும் படிக்க | ரூ.2 கோடி மதிப்புள்ள குடியிருப்பு கட்டடம் காஞ்சி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு காணிக்கை
புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக கடற்கரை சாலை உள்ளிட்ட பல இடங்களில் ஏற்பாடு செய்துள்ள கட்டமைப்புகள், இந்த மழையால் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.
சுற்றுலாவுக்கு வந்துள்ள பயணிகள், பொதுமக்கள் திடீர் மழையால் அவதி அடைந்தனர்.
தொடர்ந்து இரு தினங்கள் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால், புத்தாண்டு கொண்டாட்டம் கலையிழக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிக்க | நகைக் கடன் தள்ளுபடி: தகுதியற்றவர்களுக்காக குரல் கொடுக்கும் எதிர்கட்சிகள் - அமைச்சர் இ.பெரியசாமி