முகப்பு
தமிழ்நாடு

குறுக்கே குலை தள்ளிய வாழை!

உத்திரமேரூரில் விவசாயி ஒருவரின் தோட்டத்தில் உள்ள ஒரு வாழை மரத்தின் இடையே குலை தள்ளிய அதிசய நிகழ்வு நடந்துள்ளது. 

Updated On : 31 டிசம்பர், 2021 at 3:47 PM
வாழை மரத்தின் இடையே தள்ளியிருக்கும் குலை.
பகிர்:

உத்திரமேரூரில் விவசாயி ஒருவரின் தோட்டத்தில் ஒரு வாழை மரத்தில் குறுக்கே குலை தள்ளிய ஆச்சரியம் நடந்திருக்கிறது.
 
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சுண்ணாம்புக்காரத் தெருவைச் சேர்ந்த விவசாயி ஆர். சீனு.

வழக்கம்போல வெள்ளிக்கிழமை காலை அவர் தனது தோட்டத்திற்குச் சென்று பார்த்தபோது, அதிசயமாக ஒரு வாழை மரத்தில் இடையில் பாதி மரத்தில் குலை தள்ளியிருந்தது.

மேலும், வழக்கத்துக்கு மாறாக இந்தக் குலை மேல்நோக்கியவாறும் இருந்தது.
இதை அதிசயமாகக் கண்ட மக்கள், சீனுவின் தோட்டத்திற்கு வந்து வியந்து பார்த்துவிட்டுச் செல்கின்றனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.