சென்னையில் கரோனா பாதித்து சிகிச்சையில் 1,586 பேர்
சென்னையிலுள்ள 15 மண்டலங்களிலும் கரோனா பாதித்து சிகிச்சையிலிருப்பவர்களின் எண்ணிக்கை 1,586 ஆக உள்ளது.
சென்னை: சென்னையிலுள்ள 15 மண்டலங்களிலும் கரோனா பாதித்து சிகிச்சையிலிருப்பவர்களின் எண்ணிக்கை 1,586 ஆக உள்ளது.
சென்னையில் கரோனா பாதிப்பு குறித்து சென்னை மாநகராட்சி புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, இதுவரை ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,31,424 ஆக இருக்கும் நிலையில், இவர்களில் 2,25,729 பேர் குணமடைந்துள்ளனர்.
கரோனா பாதித்து சிகிச்சையிலிருப்பவர்களின் எண்ணிக்கை 1,586 ஆக உள்ளது. அதிகபட்சமாக கோடம்பாக்கத்தில் 184 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை கரோனாவுக்கு 4,109 பேர் பலியாகியுள்ளனர்.