முகப்பு
தமிழ்நாடு

சிவகாசியில் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் செவ்வாய்க்கிழமை சிவகாசி நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

Updated On : 2 பிப்ரவரி 2021, 12:03 pm IST
சிவகாசியில் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
பகிர்:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் செவ்வாய்க்கிழமை சிவகாசி நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

சிவகாசி நகராட்சி பகுதியில் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காக நகராட்சி பகுதி முழுவதும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பல பகுதிகளில் குழாய் பதிக்கும் பணி முடிவடைந்துள்ளது.

குழாய் பதிக்கும் பணி முடிவடைந்து உள்ள பகுதிகளை மோசமான நிலையில் உள்ளது. அந்த சாலைகளை உடனடியாக சீரமைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

Advertisement

Advertisement

நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்குக் கட்சியின் நகரச் செயலாளர் முருகன் தலைமை வகித்தார். இதில் 4 பெண்கள் உள்பட 29 பேர் கலந்து கொண்டனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.