அண்ணா நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர் மரியாதை
பேரறிஞர் அண்ணாவின் 52வது நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.
தமிழ்நாடுஅண்ணா நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர் மரியாதை
பேரறிஞர் அண்ணாவின் 52வது நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.
சென்னை: பேரறிஞர் அண்ணாவின் 52வது நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.
சென்னை மெரீனா கடற்கரையில் அமைந்துள்ள அண்ணா நினைவிடம் இன்று வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
அண்ணா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி மரியாதை செலுத்தினர்.
அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு அவர் தனது சுட்டுரைப் பக்கத்தில், தாய்த்தமிழின் மீது அளவற்ற பற்றும், தீராக்காதலும் கொண்ட தமிழன்னையின் தலைமகன்.
நம் மாநிலத்திற்கு தமிழ்நாடு எனும் பெயரை சட்டப்பூர்வமாக்கி, இரு மொழிக்கொள்கையே தமிழகத்தில் தொடரும் என வரலாற்றில் நீங்கா இடம் பிடித்த சிறந்த மனிதநேய பண்பாளரின் நினைவு நாளில் அவரை நினைவுகூர்கிறேன்.
தமிழ் மொழி, தமிழ் இனம் என எந்நேரமும் தமிழ்! தமிழ்! என தமிழ் சமூகத்திற்காகவே வாழ்ந்திட்ட பேரறிஞர் அண்ணா அவர்களை அவர்தம் நினைவு தினத்தில், போற்றி வணங்கி மகிழ்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், தனது சுட்டுரைப் பக்கத்தில், தமிழை சுவாசித்தவர்; தமிழர்களை நேசித்தவர்; ஏழையின் சிரிப்பினில் இறைவனைக் கண்டவர்; கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை உடைமைகளாக்கி வாழ்ந்து வரலாறானவர்! தமிழ்த்தாயின் தவப்புதல்வன் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் நினைவு தினத்தில், எனது நினைவஞ்சலியை பணிவோடு சமர்ப்பிக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.