தமிழகத்தில் மேலும் 471 பேருக்கு கரோனா
தமிழகத்தில் மேலும் 471 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மேலும் 471 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், இன்று புதிதாக மேலும் 471 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து மாநிலத்தில் நோய்த் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 8 லட்சத்து 41,797-ஆக அதிகரித்துள்ளது.
மாநிலத்தில் இதுவரை 1.63 கோடிக்கும் மேற்பட்ட கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கரோனா தொற்றிலிருந்து மேலும் 498 போ் குணமடைந்துள்ளனா். இதன்மூலம் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 8 லட்சத்து 25,025-ஆக உள்ளது.
தற்போது மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 4,389 போ் சிகிச்சையில் உள்ளனா். அதே நேரம், கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் ஒருவர் பலியாகியுள்ளார். இதனால், மாநிலம் முழுவதும் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,383-ஆக உயா்ந்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் 151 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.