தமிழகத்தில் புதிதாக 469 பேருக்கு கரோனா
தமிழகத்தில் புதிதாக 469 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் புதிதாக 469 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 469 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 8,42,730 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 491 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 4 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை மொத்தம் 8,26,011 பேர் குணமடைந்துள்ளனர், 12,391 பேர் பலியாகியுள்ளனர். இன்றைய நிலவரப்படி 4,328 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Advertisement
அதிகபட்சமாக சென்னையில் இன்று 139 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.