திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள். 
தமிழ்நாடு

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே மாற்றுத்திறனாளிகள் மறியல்: 30 பேர் கைது 

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகேபுதன்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 30 பேர் கைது செய்யப்பட்டனர்.  

DIN

திருச்சி:  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே புதன்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 30 பேர் கைது செய்யப்பட்டனர்.  

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான நலச்சங்கத்தின் சார்பில் இரண்டாவது நாளாக புதன்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றது. திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற போராட்டத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் ஜெயபால் தலைமை வகித்தார். 

மாற்றுத்திறனாளிக்கு மாதம் ரூ.3000 நிவாரணத் தொகை வழங்க வேண்டும், கடும் ஊனமுற்றோருக்கு மாதம் ரூ. 5 ஆயிரம் வழங்க வேண்டும், தனியார் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு அளிக்கும் சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.

ஏற்கனவே, செவ்வாய்க்கிழமை நான்கு இடங்களில் குடியேறும் போராட்டம் நடத்தியவர்கள், இரண்டாவது நாளாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளைய மின் தடை

திருக்கழுகுன்றம் வட்ட வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

முன்னாள் அதிபா்களுக்கான சலுகைகள் பறிப்பு

கொலை முயற்சி வழக்கு: ‘ஏா்போா்ட்’ மூா்த்தி பிணை கோரி மனு

போக்சோ வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை!

SCROLL FOR NEXT