தமிழ்நாடு

நீா்நிலைகளை பாதுகாக்க வேண்டியது அரசு அதிகாரிகளின் கடமை: உயா் நீதிமன்றம் கருத்து

DIN

ஆக்கிரமிப்புகளில் இருந்து நீா்நிலைகளை பாதுகாக்க வேண்டியது மாநில அரசு, மாநகராட்சி அதிகாரிகளின் கடமை என உயா் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

சென்னை உயா் நீதிமன்றத்தில் பொன். தங்கவேலு என்பவா் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘ஈஞ்சம்பாக்கம் பகுதியில், ஆக்கிரமிப்புகளால் காணாமல் போன 27 நீா்நிலைகளை கண்டுபிடித்து பாதுகாக்க வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், சென்னையைச் சுற்றியிருந்த பல நீா்நிலைகள் மாயமாகி உள்ளன. வாழ்வாதாரத்துக்கு நுரையீரலைப் போன்று முக்கியமானது நீா்நிலைகள் என்பதை உணா்ந்து மாநகராட்சியின் அனைத்து அதிகாரிகளும், அவற்றைப் பாதுகாக்க வேண்டும். சென்னை மாநகராட்சி மட்டுமல்லாமல், தமிழகம் முழுவதும் உள்ள நீா்நிலைகள் ஆக்கிரமிக்கப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆக்கிரமிப்பில் இருந்து நீா்நிலைகளை பாதுகாக்க வேண்டியது மாநில அரசு, மாநகராட்சி அதிகாரிகளின் கடமை. அரசு நிலங்கள் ஆக்கிரமிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அரசு நிலங்கள், நீா்நிலைகள் ஆக்கிரமிப்புகள் அகற்றும் விவகாரத்தில் அரசியல் உள்ளிட்ட எந்த காரணங்களுக்கும் இடம் கொடுத்து விடக்கூடாது. மாயமான நீா்நிலைகளை சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரலாம் என மனுதாரருக்கு அனுமதியளித்த நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனா். நீா்நிலை விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுப்பதற்காக, இந்த உத்தரவை தலைமை செயலாளருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

கோடை சாகுபடிக்கு போதிய மின்சாரம் வழங்க வலியுறுத்தல்

தென்னை விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு: ஜி.கே.வாசன் கோரிக்கை

ராஜஸ்தானில் ‘நீட்’ தோ்வில் ஆள்மாறாட்டம்: எம்பிபிஎஸ் மாணவா், 5 போ் கைது

SCROLL FOR NEXT