முகப்பு
தமிழ்நாடு

சிவகாசியில் மாற்றுத் தொழிற்சாலைகளை உருவாக்கினால் பட்டாசு விபத்துகளைத் தடுக்கலாம்: துரைமுருகன்

சிவகாசியில் மாற்றுத் தொழிற்சாலைகளை உருவாக்கினால் காலப்போக்கில் பட்டாசு விபத்துகளைத் தடுக்கலாம் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:31 PM
கோப்புப் படம்.
பகிர்:

சிவகாசியில் மாற்றுத் தொழிற்சாலைகளை உருவாக்கினால் காலப்போக்கில் பட்டாசு விபத்துகளைத் தடுக்கலாம் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், வேலூரில், செய்தியாளர்கள் என்னை சந்தித்த போது "சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட ஒரு விபத்தின் விளைவாக பலர் இறந்திருக்கிறார்களே?" என்ற கேள்வியை என்னிடம் கேட்டார்கள்.

அதற்கு நான், "சிவகாசி பகுதிகளில் உள்ள பட்டாசு தொழிற்சாலைகளில் இளம் சிறார்கள் முதல் பெரியவர்கள் வரையில் ஏராளமானோர் பணிபுரிகிறார்கள். இத்தகைய விபத்துகள் ஏற்படாமல் தடுக்க வேண்டுமானால், அரசு, அம்மக்களுக்கென மாற்று தொழிற்சாலைகளை அந்த பகுதியிலே உருவாக்கி, அவர்களுக்கெல்லாம் வேலைவாய்ப்பினை உருவாக்கினால், காலப்போக்கில் இத்தகைய விபத்துகளை தடுக்கலாம். காலப்போக்கில் பட்டாசு தொழிற்சாலைகளும் மூடப்படலாம்." என்று நான் தெரிவித்தேன்.

ஆனால், எனது பேட்டியை திரித்தும் - மாற்றியும் வெளியிட்டிருப்பதால், சிவகாசி பகுதி மக்களிடையே ஒரு தவறான எண்ணம் உருவாக்கப்பட்டிருப்பது எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. அதற்கான விளக்கமே இது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.