முகப்பு
தமிழ்நாடு

பிளஸ் 2 தேர்வு தேதியை அறிவித்ததில் குழப்பமில்லை: செங்கோட்டையன்

12-ம் வகுப்பு பொதுதேர்வு தேதியை அறிவித்ததில் எந்தக் குழப்பமுமில்லை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:33 PM
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் (கோப்புப்படம்)
பகிர்:

12-ம் வகுப்பு பொதுதேர்வு தேதியை அறிவித்ததில் எந்தக் குழப்பமுமில்லை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கோபிசெட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசித்த பிறகே தேர்வு தேதி இறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்.

சிபிஎஸ்இ பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய திறனாய்வு தேர்வு கட்டணத்தை அரசே செலுத்துவது குறித்து, முதல்வருடன் வரும் 23-ம் தேதி ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்று குறிப்பிட்டார்.

மேலும், நூலகங்களில் உள்ள காலிப் பணியிடங்கள் தற்காலிக ஆட்களைக் கொண்டு நிரப்பப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். 

முழு கட்டுரையைப் படிக்க →