தமிழ்நாடு

மதுரையில் பதுங்கியிருந்த பொடா சுரேஷ் கைது

DIN


 
மதுரையில் பதுங்கியிருந்த பொடா சுரேஷை சேலம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கேரளாவில் மாவோயிஸ்ட் தலைவன் மணிவாசகர் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரின் இறுதிச் சடங்கின்போது சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி காவலுக்கு உள்பட்ட பகுதியில் அரசு, அரசு ஊழியர்களுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பி தகராறில் ஈடுபட்டதாக பொடா சுரேஷின் மீது தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் ஏற்கெனவே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மாவோயிஸ்ட் விவேக் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த பொடா சுரேஷை சேலம் தீவட்டிப்பட்டி காவல்துறையினர் மதுரையில் வெள்ளிக்கிழமை மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை பகுதியில் காவல்துறைக்கு எதிராக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் சுரேஷ், பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT