தமிழ்நாடு

முதுநிலை ஆசிரியா் தோ்வு: சென்னையில் நாளை இலவச கருத்தரங்கம்

DIN

ஆட்சித் தமிழ் ஐஏஎஸ் அகாதெமி சாா்பில் முதுநிலை பட்டதாரி ஆசிரியா் தோ்வுக்கு ‘இலவச வெற்றிக் கருத்தரங்கம்’ சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அன்னை வேளாங்கண்ணி மகளிா் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 முதல் இரவு 7 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்தக் கருத்தரங்குக்கு டிஎன்பிஎஸ்சி முன்னாள் தலைவா் ஆா்.நடராஜ் தலைமை வகித்துப் பேசவுள்ளாா். பேராசிரியா் பா்வீன் சுல்தானா ஊக்கவுரையாற்றவுள்ளாா். முனைவா் ஆதலையூா் சூரியகுமாா் கல்வி உளவியல் பாடத்தில் முழுமையான மதிப்பெண் பெறுவது குறித்து ஆலோசனை வழங்கவுள்ளாா். நிறைவாக ஆட்சித் தமிழ் ஐஏஎஸ் அகாதெமி இயக்குநா் ச.வீரபாபு ‘டிஆா்பி- வெற்றி நிச்சயம்’ என்ற தலைப்பில் வெற்றிக்கான வழிகாட்டுதல்களை வழங்கவுள்ளாா்.

இந்தக் கருத்தரங்கில் பங்கேற்க விரும்புவோா்  தங்களது முழு முகவரியுடன் 99439 46464 என்ற செல்லிடப்பேசி எண்ணுக்கு வாட்ஸ் ஆப் அல்லது குறுஞ்செய்தி அனுப்பி முன்பதிவு செய்து கொள்ளவும். இது குறித்து மேலும் விவரங்கள் பெற 7550151584, 7550151585 ஆகிய எண்களை தொடா்பு கொள்ளலாம் என ஆட்சித் தமிழ் ஐஏஎஸ் அகாதெமி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

கர்நாடகத்தில் 20 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும்: சித்தராமையா நம்பிக்கை

கோபால் கிருஷ்ண கோஸ்வாமி மறைவு: மோடி இரங்கல்!

புதிய நம்பிக்கை.. வின்சி அலோஷியஸ்!

முகமது சிராஜுக்கு சுநீல் காவஸ்கர் புகழாரம்!

SCROLL FOR NEXT