தமிழ்நாடு

அவிநாசி அருகே கிணற்றில் தவறிவிழுந்த புள்ளிமான் பலி

DIN

அவிநாசி அருகே மேற்கு வஞ்சிபாளையத்தில் தோட்டத்து கிணற்றுக்குள் தவறி விழுந்த புள்ளிமான் திங்கள்கிழமை உயிரிழந்தது.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே புதுப்பாளையம் ஊராட்சி மேற்கு வஞ்சிபாளையம் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான தோட்டத்தில் கிணறு உள்ளது. இதில் வழி தவறி வந்த புள்ளிமான், கிணற்றுக்குள் விழுந்து வெளியேற முடியாமல் போராடியது. 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த  அவிநாசி தீயணைப்பு துறையினர், வனத்துறையினர் உள்ளிட்டோர் கிணற்றுக்குள் விழுந்த மானை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். திங்கள்கிழமை மாலை வரை  போராடி, 40 அடி ஆழம் உள்ள நீர் இல்லாத கிணற்றிலிருந்து  மீட்டனர். 

இருப்பினும் ஒரு வயதான ஆண் புள்ளிமான்  நிலையில், இங்கு வந்த ஒரு வயது ஆண் புள்ளிமான் உயிரிழந்தது. நீண்ட நேரம் போராடி மானை உயிருடன் மீட்க முடியாததால் பொதுமக்கள் ஆழ்ந்த சோகத்திற்கு உள்ளாகினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ள பில் தொகை: மாநகராட்சி ஒப்பந்ததாரா்கள் குற்றச்சாட்டு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் துன்புறுத்தல் புகாா்: சாட்சியங்களிடம் விரைவில் போலீஸாா் விசாரணை

மகளிா் விடுதிகள் இணையத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டும் ஆட்சியா் அறிவுறுத்தல்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

தனியாா் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: மறைமுகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்

SCROLL FOR NEXT