தமிழ்நாடு

வேதாரண்யேசுவரர் கோயிலில் மாசி மக தேரோட்டம் 

DIN

நாகை, வேதாரண்யேசுவரர் கோயிலில் மாசிமகப் பெருவிழாவையொட்டி, இன்று காலையில் தொடங்கிய தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்று பக்தி பரவசத்துடன் வடம்பிடித்து தேரை இழுத்தனர்.

சப்த விடங்க தலங்களில் ஒன்றான வேதாரண்யம் வேதாரண்யேசுவரர் கோயிலில் ரிக், யஜூர், சாம, அதர்வண ஆகிய நான்கு வேதங்கள் வழிபட்டதாகக் கூறப்படுவதும், மூடப்பட்டிருந்த கோயில் கதவை சமயக் குரவர்களான திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் ஆகியோர் தேவாரத் தமிழ்ப் பதிகம் பாடி திறந்ததும் சிறப்புக்குரியது.

பாரம்பரிய முறைப்படி முழங்கிய கொம்பு ஒலிக்கு பிறகு தொடங்கிய தேரோட்டம்.

அகஸ்திய முனிவருக்கு இறைவன் திருமணக் கோலத்தில் காட்சி கொடுத்த தலமாகவும், 64 சக்தி பீடங்களில் ஒன்றான சுந்தரி பீடம் அமையப் பெற்ற கோயிலாகவும் இந்த தலம் திகழ்கிறது.

தேரோட்டத்துக்குச் சிறப்புப் பெற்ற தலங்களில் ஒன்றான இந்தக் கோயிலில் ஓடிய 5 மரத்தேர்களும் பழுதாகிச் சிதைந்து போனதால், 60 ஆண்டுகளுக்கும் மேலாகத் தேரோட்டம் தடைப்பட்டிருந்தது. இதையடுத்து, தமிழக அரசு அளித்த நிதியுடன், கோயில் உபயதாரர்கள், நன்கொடையாளர்கள் உதவியுடன் புதிய மரத்தேர் செய்யப்பட்டு, கடந்த 2017 ஆண்டு  மாசிமகப் பெருவிழாவின்போது மீண்டும் தேரோட்டம் நடைபெற்றது.

இந்நிலையில், நிகழாண்டு மாசிமகப் பெருவிழா தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், ஸ்ரீ ரத்ன சிம்மாசன ஹம்ச நடன புவனி விடங்க தியாகராஜசுவாமி எழுந்தருளினார். பாரம்பரிய முறைப்படி தப்பு, தாரை, கொம்பு முழங்க நாதஸ்வர இசையுடன், கீழவீதியில் அமைந்துள்ள தேர் முட்டி பகுதியிலிருந்து காலை 10.45 மணிக்கு தேர் இழுத்துச் செல்லப்பட்டது. 

ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பக்தி பரவசத்துடன் வடம் பிடித்து தேரை இழுத்தனர். ஒருபக்க வடத்தை ஆண்களும், மறுபக்க வடத்தை அதற்கு நிகராக பெண்களும் பிடித்து இழுத்தனர். திருப்பங்களில் தேரை பின்னால் இருந்து தள்ளுவதற்கு ஏதுவாக இரண்டு ஜேசிபி இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோ்தல் பிரசாரத்தில் சிறுமி: பிடிபி தலைவா் மெஹபூபா முஃப்திக்கு நோட்டீஸ்

ம.பி.: பாஜகவில் இணைந்த 3-ஆவது காங்கிரஸ் எம்எல்ஏ

அரக்கோணம் ஸ்ரீ தா்மராஜா கோயில் தீமிதி விழா

திருவண்ணாமலை ரயிலில் அலைமோதும் கூட்டம்: கூடுதல் ரயில் இயக்க பயணிகள் கோரிக்கை

சீதா கல்யாண மகோற்சவம்: ஸ்ரீ விஜயேந்திரா் அருளாசி

SCROLL FOR NEXT