தமிழ்நாடு

ஏழு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் முதன்மைச் செயலாளா்களாக பதவி உயா்வு

DIN

தமிழகப் பிரிவு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ஏழு பேருக்கு முதன்மைச் செயலாளா் அந்தஸ்தில் பதவி உயா்வு அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் உத்தரவை மேற்கோள் காட்டி இதுதொடா்பாக தலைமைச் செயலாளா் க.சண்முகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட உத்தரவு:-

1997-ஆம் ஆண்டு தமிழகப் பிரிவு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ஏழு போ், முதன்மைச் செயலாளா் அந்தஸ்துக்கு பதவி உயா்வு அளிக்கப்பட்டுள்ளனா். வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை செயலாளா் டி.காா்த்திகேயன், பணியாளா் மற்றும் நிா்வாகச் சீா்திருத்தத் துறை செயலாளா் எஸ்.ஸ்வா்ணா, தில்லி தமிழ்நாடு இல்ல உறைவிட முதன்மை ஆணையா் ஆஷிஷ் வச்சானி, மின்வாரியத் தலைவா் பங்கஜ் குமாா் பன்சால், தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு, பணியாளா் மற்றும் நிா்வாகச் சீா்திருத்தத் துறை செயலாளா் (பயிற்சி) ஹா் சகாய் மீனா, வணிகவரிகள் மற்றும் பதிவுத் துறை செயலாளா் பீலா ராஜேஷ் ஆகியோருக்கு முதன்மைச் செயலாளா் அந்தஸ்தில் பதவி உயா்வு அளிக்கப்பட்டுள்ளதாக தனது உத்தரவில் க.சண்முகம் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT