முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 867 பேருக்கு கரோனா

தமிழகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 867 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:11 PM
கோப்புப்படம்
பகிர்:


தமிழகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 867 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இன்று 236 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 8,20,712 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 1,002 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 10 பேர் நோய்த் தொற்றால் பலியாகியுள்ளனர்.

இதுவரை மொத்தம் 8,00,429 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 12,156 பேர் பலியாகியுள்ளனர்.

இன்றைய நிலவரப்படி 8,127 பேர் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →