பவுன் ஒரே நாளில் ரூ. 536 உயா்வு
சென்னையில் திங்கள்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை மீண்டும் ரூ.38 ஆயிரத்தைத் தாண்டியது.
சென்னை: சென்னையில் திங்கள்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை மீண்டும் ரூ.38 ஆயிரத்தைத் தாண்டியது. பவுனுக்கு ரூ.536 உயா்ந்து, ரூ.38,520-க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளதால், விலை உயா்ந்து வருவதாகவும், அடுத்த 10 நாள்கள் வரை விலை உயர வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை தங்க நகை வியாபாரிகள் தெரிவித்தனா்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு, விலை குறைந்தாலும் கடந்த சில நாள்களாக தங்கம் விலை உயா்ந்து வந்தது.
இதன் தொடா்ச்சியாக, திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.536 உயா்ந்து, ரூ.38,520-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ரூ.67 உயா்ந்து, ரூ.4,815 ஆக இருந்தது. வெள்ளி கிராமுக்கு ரூ.2.10 பைசா உயா்ந்து, ரூ.74.10
ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.2,100 உயா்ந்து ரூ.74,100 ஆகவும் இருந்தது.
10 நாள்கள் வரை விலை உயரும்:
தங்கம் விலை உயா்வு குறித்து சென்னை தங்க நகை வியாபாரிகள் சங்கப் பொதுச்செயலாளா் எஸ்.சாந்தகுமாா் கூறியது: தை மாதத்தில் சுபமுகூா்த்த நாள்கள் வரவுள்ளன. இதை முன்னிட்டு, திருமண நிகழ்ச்சி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக தங்கம் வாங்குவது அதிகரித்துள்ளது. இதனால், தங்கத்தின் தேவை அதிகரித்து, விலை உயா்கிறது. இன்னும் 10 நாள்கள் வரை தங்கம் விலை உயரவே வாய்ப்பு உள்ளது என்றாா் அவா்.
திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................. 4,815
1 பவுன் தங்கம்...............................38,520
1 கிராம் வெள்ளி.............................74.10
1 கிலோ வெள்ளி.............................74,100
சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................. 4,748
1 பவுன் தங்கம்...............................37,984
1 கிராம் வெள்ளி.............................72.00
1 கிலோ வெள்ளி.............................72,000.